"அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கைக்கு கடன் அளிக்கும் ஒரே நாடு இந்தியா" - இலங்கை அமைச்சர்

0 2853
"அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கைக்கு கடன் அளிக்கும் ஒரே நாடு இந்தியா" - இலங்கை அமைச்சர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கடன் உதவி அளிக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார்.

அசாதாரண சூழ்நிலையில் உள்ள இலங்கைக்கு உதவுமாறு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இலங்கைக்கு உதவும் ஒரே நாடு இந்தியாதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம் எரிபொருள் உதவி கேட்டு பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் உதவி கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் விஜேசேகரா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments